ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் காரின் அடியில் சிக்கிய வயதான தொண்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குண்டூர் மாவட்டம் வெண்ட்டபள்ளி பகுதியில் காரில் பேரணியாக வந்தார்.
அப்போது தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு பூக்களை தூவி வரவேற்றதுடன் அவரை சூழ்ந்து கொண்டு கைக்குலுக்கினர்.
அப்போது அவரது கார் முன்னோக்கி சென்றபோது அக்கட்சியின் 65 வயதுடைய சீலி சிங்கையா என்ற தொண்டர் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் முன்பக்க டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.