ஞாயிறு விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கிருத்திகை மற்றும் ஞாயிறு விடுமுறையையொட்டி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து மனமுருகி சாமி தரிசனம் செய்தனர்.