வாணியம்பாடி அருகே அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்வதற்காகச் சென்ற அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் தும்பேரி ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான சுமார் 5 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது.
அந்த நிலத்தில் ஏழை மக்களுக்கு வீடு, ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் அதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் சென்றனர்.
அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசுக்குச் சொந்தமான இடத்தில் வெளியூர் மக்களுக்குப் பட்டா வழங்கக் கூடாது எனவும் தங்கள் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.