மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்ற திடல் இந்து முன்னணியினரின் உடனடியாக தூய்மை செய்தது பலரின் பாராட்டை பெற்றுள்ளளது.
மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணியினர் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மாநாடு முடிந்தவுடன் உடனடியாக அந்த இடத்திலிருந்து குப்பைகளை அகற்றும் பணியிலும், நாற்காலிகளை நேர்த்தியாக அடுக்கி வைக்கும் பணியிலும் இந்து முன்னணியினர் ஈடுபட்டனர்.
இதனால், நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரத்திலேயே அந்த இடம் மீண்டும் தூய்மையாகக் காட்சியளித்தது.