விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திமுகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
கூட்டேரிப்பட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் மிகக் கடுமையாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், மேடையில் ஏறி மைக்கை பிடுங்கிப் பேசவிடாமல் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.