கிருஷ்ணகிரி மாவட்டம், கொல்லபள்ளியில் கன்று விடும் போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
இதில் 12-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்றன. அப்போது வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரத்தை மிக குறைந்த நேரத்தில் கடந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
போட்டியைச் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கண்டு ரசித்தனர்.