சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழாவையொட்டி நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க உத்சவ ஆச்சாரியார் சிவகைலாஸ் தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 1ம் தேதியும், ஆனித் திருமஞ்சன தரிசனம் ஜூலை 2-ம் தேதியும் நடைபெறும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.