பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே 3 மாதங்களாகக் குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறி அமைச்சர் சிவசங்கரை மக்கள் முற்றுகையிட்டனர்.
ஓலைப்பாடி கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டப் பணிக்குப் பூமி பூஜை நடைபெற்றது.
இதில் குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்து கொண்டார். அப்போது அவரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 3 மாத காலமாகக் குடிப்பதற்கு நீர் வழங்காமல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்காக இப்போது எதற்குப் பூமி பூஜை செய்கிறீர்கள் என மக்கள் கேள்வி எழுப்பினர்.