கேரள மாநிலம், கொல்லத்தில் எருமை மாட்டின் கயிற்றில் சிக்கிய முதியவர் சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கொல்லம் குண்டறா பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், எருமை மாட்டை வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அப்போது அந்த மாடு ஆரோக்கியமாக இருக்கிறதா என முதியவர் சோதனை செய்துள்ளார்.
இதனால் மிரண்டு போன எருமை மாடு திடீரென ஓடத் தொடங்கியது. இதனிடையே எருமை மாட்டின் கயிறு முதியவரின் இடுப்பு மற்றும் கால்களில் சிக்கிக் கொண்டது.
இதனால் சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட முதியவர், எதிரே இருந்த கார் மீது மோதி படுகாயமடைந்தார். இதனையடுத்து முதியவரை மீட்ட அக்கம், பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.