சேப்பாக்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி சென்றபோது குடிசைகள் திரைச்சீலைகளைக் கெண்டு மறைக்கப்பட்டது பேசு பொருளாகி உள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சேப்பாக்கம் தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுவைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அப்போது உதயநிதி செல்லும் வழியில் பக்கிங்காம் கால்வாய் மற்றும் ஏழைகளின் குடிசைகளை மறைக்க இருபுறமும் திரைச்சீலைகள் கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.
ஒருபுறம் பக்கிங்காம் கால்வாய், மறுபுறம் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகள் துணியால் மறைக்கப்பட்ட சம்பவம் தற்போது பேசு பொருளாகி உள்ளது.
இது குறித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த மே 31ம் தேதி மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் சென்ற போது, அவர் செல்லும் வழியிலிருந்த கழிவு நீர் கால்வாய் அலங்காரத் துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம் விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.