கட்சியில் 50 ஆண்டு காலமாக இருந்தாலும் திமுகவிடம் கைக்கட்டி நிற்க வேண்டிய நிலை உள்ளது எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆதங்கம் தெரிவித்து உள்ளனர்.
தென்காசியில் அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மூத்த தலைவர்கள் தேர்தலின்போது தங்களுக்கான சீட்டுகளை அதிகப்படுத்தினால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் எனவும், சீட்டு பெறுவது உள்ளிட்ட அனைத்திற்கும் திமுகவிடம் கைக்கட்டி நிற்க வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவித்தனர்.