திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, மது போதையில் உணவக ஊழியரை இளைஞர்கள் தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏரிப்பாளையத்தில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு மது போதையில் சென்றிருந்த 5 இளைஞர்கள், அங்கு உணவு ஆர்டர் செய்தனர். அப்போது ஆம்லெட் கொடுக்க தாமதப்படுத்தியதாகக் கூறி உணவக ஊழியரை, அவர்கள் தாக்கியுள்ளனர்.
நாற்காலிகளைக் கொண்டு அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டது அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. மது போதையிலிருந்தவர்கள், உடுமலை திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ் குமாருடன் சுற்றுலா சென்று விட்டுத் திரும்பி வரும் வழியில் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.