விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வெறிநாய் ஒன்று பொதுமக்களைத் துரத்தித் துரத்தி கடித்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டிப்படுத்தியதாகத் தமிழக அரசு கூறிவரும் நிலையில் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி பகுதியில் கடந்த 2 தினங்களாக வெறி நாய் ஒன்று 40-க்கும் மேற்பட்டோரைக் கடித்துக் குதறியது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களோடு வெளியே வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கூமாபட்டி சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்த பெண் ஒருவரை வெறி நாய்க் கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாய்க்கடியால் காயமடைந்த அனைவரும் விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு பொதுமக்களைக் கடித்து வரும் நாயைப் பிடிப்பதற்கு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
40க்கும் மேற்பட்டோரைக் கடித்துக் குதறிய வெறிநாய் அப்பகுதிகளில் உள்ள கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளையும் கடித்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கூமாபட்டி பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.