விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அரசு டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் கேட்கும் ஊழியரின் வீடியோ வைரலாகி வருகிறது.
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள, அரசு டாஸ்மாக் கடையில் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாயும் பீர் பாட்டிலுக்கு 15 ரூபாயும் வசூலிப்பதாகத் தொடர் புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில மதுபிரியர் ஒருவர் குவாட்டர் பாட்டில் 230 ரூபாய் கொடுத்து வாங்கிய போது கூடுதலாக பத்து ரூபாய் வழங்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் கேட்டுள்ளார்.
பாட்டிலில் நிர்ணயத்த விலையை விட ஏன் கூடுதலாகக் கேட்கிறீர்கள் எனக் கேட்டபோது, என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என டாஸ்மாக் ஊழியர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.