பழங்குடி மக்களின் தோழன் சுள்ளி கொம்பன்!
Jan 14, 2026, 08:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடி மக்களின் தோழன் சுள்ளி கொம்பன்!

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருடத்திற்கு நான்கு மாதங்களுக்கு மட்டுமே மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வரும் சுள்ளிக் கொம்பன் யானையை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர். பழங்குடியின மக்களின் குடும்பத்தில் ஒருவனாக மாறியிருக்கும் சுள்ளிக் கொம்பன் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலையோடு இயற்கையின் பல்வேறு அதிசயங்களையும் உள்ளடக்கியது தான் இந்த ஆனைமலை புலிகள் காப்பகம். எப்போதும் இயற்கை எழில் கொஞ்சும் சூழல் நிலவும் இப்பகுதி சுற்றுலாப்பயணிகள் விரும்பிக் கழிக்கும் சிறந்த பொழுது போக்கு தளமாகவும் விளங்குகிறது.

யானை, புலி, சிங்கவால்குரங்கு, வரையாறு, புள்ளிமான் போன்ற பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாகவும் திகழும் ஆழியாறு பகுதிக்குக் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சுள்ளி கொம்பன் எனும் ஒற்றை யானை அவ்வப்போது வந்து செல்கிறது.

ஒவ்வொரு வருடமும் மார்கழி, தை, மாசி, பங்குனி என நான்கு மாதங்களில் பொழுதைக் கழிக்க வரும் சுற்றுப்பயணிகளைப் போலவே, கேரளப்பகுதியில் இருந்து இந்த சுள்ளி கொம்பன் யானையும் வந்துவிடுவதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். கண்ணுக்கு எட்டும் தூரத்தில் கொத்துக் கொத்தாகத் தொங்கும் பலாப்பலங்கள் தான் சுள்ளி கொம்பனுக்குப் பிரதான உணவாகவும் அமைந்திருக்கிறது

பகல் நேரங்களில் நவமலை பகுதி, மாலை நேரத்தில் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் வலம் வருவது எனப் பொள்ளாச்சி வனப்பகுதியை முழுவதுமாக சுற்றிவரும் இந்த சுள்ளிக் கொம்பனுக்குப் பொதுமக்கள் வைத்திருக்கும் பெயர் THE GIGANTIC PET OF WESTERN GATZ. அதே சமயம் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரே பாதையில் பயணிக்கும் சுள்ளிக் கொம்பனைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர்.

நான்கு மாத காலத்திற்குப் பிறகு கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும் மீண்டும் கேரளத்தின் நெல்லியம்பதி, கீரைப்பாடி ஆகிய பகுதிகளுக்கு தன்னுடைய பயணத்தைச் சுள்ளிக் கொம்பன் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. பொதுமக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத சுள்ளிக் கொம்பன் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் குடும்பத்தில் ஒருவனாகவே மாறியிருக்கிறது.

Tags: மேற்குத் தொடர்ச்சி மலைThe tribal people's friendSulli Kombanசுள்ளி கொம்பன்
ShareTweetSendShare
Previous Post

உயிர் பயத்தில் மக்கள் : எந்த நேரமும் இடிந்து விழும் – அபாயத்தில் குடியிருப்புகள்!

Next Post

போர் விமானங்களின் ராட்சசன் : ஈரானின் அணுசக்தி ஆசையை அழித்த அசுரன்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies