ஆப்ரேஷன் சிந்து மூலம் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்ப தமிழ்நாடு அரசு எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக இரு நாடுகளில் இருந்தும் இந்தியர்களை ஆப்ரேஷன் சிந்து நடவடிக்கை மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து டெல்லி வரை தங்களை மத்திய அரசு பாதுகாப்பாக அழைத்து வந்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாவும் நாடு திரும்பிய மாணவர்கள் தெரிவித்தனர்.
அதேசமயம் தமிழக அரசு டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப தங்களுக்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மூன்று நாட்களாக பயணம் செய்து சோர்வில் இருந்த தங்களுக்கு , விமான டிக்கெட் கூட எடுத்து தரவில்லை எனவும் தாங்களாகவே டிக்கெட் எடுத்துக்கொண்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தோம் எனவும் நாடு திரும்பிய மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.