திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணிக்காக அமைக்கப்பட்ட கொரம்பு, நீரில் அரித்துச் செல்லப்பட்டதால், கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம் மேலசிந்தாமணி – மாம்ழச்சாலை இடையே காவிரி ஆற்றின் குறுக்கே 106 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. புதிய பாலம் கட்டும் பணிக்காக 30 மீட்டர் நீளத்துக்கு கொரம்பு அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், கொரம்பு நீரில் அரித்துச் செல்லப்பட்டது. இதனால் புதிய பால கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், சிறு சிறு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.