சென்னையில் விசிக சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்காக, வாலாஜா சாலை முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டன.
சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்ட நிலையில், அவரை வரவேற்க கட்சி நிர்வாகிகள் சார்பில் சாலையின் நடைபாதை முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டன.
இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்த நிலையில், போலீசார் அதனை கண்டும் காணாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தவெக பேனர்களை அனுமதி இல்லை எனக்கூறி அகற்றிய போலீசார், திமுக கூட்டணியில் இருக்கும் விசிக பேனர்களை அகற்றாமல் வேடிக்கை பார்த்தது ஏன் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.