பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் பொம்மைகளை புதுச்சேரி பள்ளி மாணவிகள் உருவாக்கியுள்ளனர்.
முத்திரைப்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் இயற்பியல் செயல்திட்டமாக ஜாரா என்ற பொம்மையை உருவாக்கி உள்ளனர்.
பொம்மையின் அந்தரங்க பாகங்களை தொட்டால் தொடாதே என மும்மொழிகளிலும் சொல்லும் வகையில் மாணவிகள் இந்த பொம்மையை உருவாக்கி அசத்தி உள்ளனர்.