கோவை காரமடை நகராட்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் உரியத் திட்டமிடல் இன்றி கழிவுநீர் வாய்க்கால் வீடுகளுக்குள் வருவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காரமடை நகராட்சிக்குட்பட்ட சேரன் நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அதிகாரிகள் முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால் கழிவுநீர் முழுவதும் வடிந்து செல்லாமல் ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் அளவுக்குக் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.