ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் : விண்வெளியில் விவசாயம்!
Mar 19, 2026, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் : விண்வெளியில் விவசாயம்!

Murugesan M by Murugesan M
Jun 25, 2025, 08:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி வீரர் சுபன்ஷு சுக்லா 7 முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அவற்றில் முக்கியமான ஆராய்ச்சியாகக் கருதப்படும் விண்வெளியில் விவசாயம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நாசாவின் ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உட்பட 4 பேர் பால்கன் 9 ராக்கெட்டின் டிராகன் விண்கலம் மூலம் விண்ணுக்குப் புறப்பட்டுள்ளனர்.

விண்ணில் நிலைத்தன்மையுடன் மனிதன் வாழ்வது எப்படி என்பது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் இந்த பயணத்தின் போது மேற்கொள்ளப்பட உள்ளன. விண்வெளியில் நுண்ணீர்ப்பு தொடர்பாக இந்திய ஆய்வு நிறுவனங்கள் மேற்கொண்ட 7 சோதனைகளை விண்ணில் சுக்லா ஆய்வுக்கு உட்படுத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ககன்யான் மற்றும் இந்திய விண்வெளி மையம் தொடர்பான திட்டங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் சுபன்ஷு சுக்லாவின் இந்த பயணம் மற்றொரு முக்கியமான ஆய்வையும் மேற்கொள்ள ஏதுவாக அமைந்திருக்கிறது.

விண்வெளியில் விதைகள் முளைப்பதற்கான ஆய்வு தான் அது.  விண்வெளியில் ஈர்ப்பு விசையின் தாக்கம் கிட்டத்தட்ட இல்லாத நிலையில், விதை எப்படி முளைக்கும் ? விண்வெளியில் வளரும் தாவரங்களின் தன்மை என்னவாக இருக்கும் என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடிய வகையில் ஆக்ஸியம் 4 திட்ட உறுப்பினர்கள் பல்வேறு வகையிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்

சந்திரன், செவ்வாய் போன்றவற்றிற்கான நீண்ட பயணங்களின் போது காய், கனிகள் போன்ற உணவுப் பொருட்கள் அவசியமானதாக அமைந்திருக்கிறது. அதோடு நீண்ட பயணங்களின் போது குப்பிகளிலும், பொட்டலங்களாகவும் பதப்படுத்தப்பட்ட உணவை மட்டுமே சார்ந்திருக்க முடியாது என்பதால் விண்வெளி விவசாயம் விண்வெளி வாழ்வாதாரத்திற்கும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே விண்வெளியில் புதிய ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்யத் தாவர வளர்ப்பு எனும் புதிய உத்தியை விஞ்ஞானிகள் கையாளத் தொடங்கியுள்ளனர்.

நீண்டநாள் விண்வெளி பயணத்தின் போது பயணிகளின் எலும்பு செறிவு குறைந்த போவதற்கும் வாய்ப்பிருப்பதால், அதன் தேய்மானத்தைத் தடுத்து நிறுத்தும் புரதம் நிறைந்திருக்கும் லெட்யூஸ் எனும் தாவரத்தை ஏற்கனவே விண்வெளியில் வளர்த்து சோதனையும் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் ஊட்டம் தரும் மருந்துகளை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக தங்களுக்குத் தேவையான நுண் ஊட்டங்களை அங்கேயே வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

விண்வெளியில் விவசாயம் என்பதைச் சாத்தியமாக்கும் முயற்சியில் ஆக்ஸியம் 4 பயணம் மிக முக்கிய பங்காற்றப் போகிறது. விண்வெளியில் வளர்க்கப்படும் வெந்தயம் மற்றும் பயிறு முளைகளை, பூமியில் வளர்க்கப்படும் முளைகளுடன் ஒப்பிட்டு, விண்வெளி முளைகள் உண்ண பாதுகாப்பாக இருக்குமா? அதில் ஏதேனும் தீங்குகள் விளைவிக்கும் நச்சுகள் இருக்குமா என்பது குறித்து சோதனை நடைபெற உள்ளது.

மேலும் உணவுப்பயிர் விதைகளின் மீதான நுண்ணீர்ப்பு விசையின் தாக்கம் எனும் ஆய்வையும் மேற்கொண்டு ஆறு வகைப் பயிர்களின் விதைகள் விண்வெளி சூழலுக்கு உட்படுத்தப்பட்டு பூமிக்குக் கொண்டு வரப்பட உள்ளது. .

இந்த விதைகளில் இருந்து வரும் முதல் தலைமுறை பயிரைக் கொண்டு அடுத்த தலைமுறையை உருவாக்கும் திட்டமும் உள்ளது. இப்படி அடுத்தடுத்த தலைமுறையின் விதையை உருவாக்கி விண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் விளைச்சலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களில் எதிர்கால குடியிருப்புகளை ஏற்படுத்துவதற்கு முன் விண்வெளியில்  தாவரங்கள் எப்படி வளரும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பூமிக்கு அப்பால் திறம்ப விவசாயம் செய்வதற்குத் தேவையான அடிப்படை ஆய்வுக்கு உதவும் ஆக்ஸியம் 4 பயணத் திட்டம் ராசாவுக்கு மட்டுமல்ல இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தில் ஏற்பட்ட புரட்சியைப் போலவே, விண்வெளியிலும் விவசாய புரட்சியை நிகழ்த்துவதற்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Tags: நாசாJourney to the International Space Station under the Axiom 4 project: Agriculture in spaceசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்ஆக்ஸியம் 4விண்வெளியில் விவசாயம்
ShareTweetSendShare
Previous Post

விளைநிலங்களை அழித்து பசுமை வழிச்சாலை? : அரசுக்கு எதிராக கொந்தளிப்பு!

Next Post

புவிசார் அரசியலில் மாற்றம் : மத்திய கிழக்கில் புது உலகம் – தனிமைப்படுத்தப்பட்ட ஈரான்!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies