விளைநிலங்களை அழித்து பசுமை வழிச்சாலை? : அரசுக்கு எதிராக கொந்தளிப்பு!
Jul 23, 2026, 09:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விளைநிலங்களை அழித்து பசுமை வழிச்சாலை? : அரசுக்கு எதிராக கொந்தளிப்பு!

Murugesan M by Murugesan M
Jun 25, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை முதல் சத்தியமங்கலம் இடையிலான தமிழக அரசின் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விளைநிலங்களை அழித்துப் போடப்படும் சாலைத்திட்டத்திற்கான பணிகளை இனியும் தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்திலிருந்து கோவில்பாளையம், அன்னூர் வழியாக ஈரோடு மாவட்டத்தின் புளியம்பட்டி சத்தியமங்கலம் செல்லும் சாலையில் நாள்தோறும் 25 ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்த நிலையில் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கோவையிலிருந்து திம்பம் வழியாகக் கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களையும் இணைக்கும் வகையில் மத்திய அரசால் திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை, மலைப்பகுதி, புலிகள் சரணாலய அறிவிப்பு ஆகியவற்றால் கைவிடப்பட்டது. மத்திய அரசால் கைவிடப்பட்ட சாலையை தற்போது மாநில அரசு பசுமை வழிச்சாலை எனும் பெயரில் அமைக்கத் திட்டமிட்டு வருவதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோவையில் செயல்படுத்தப்படும் ஏராளமான வளர்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் விவசாயிகள், இந்த பசுமை வழிச்சாலைக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையத்தில் தொடங்கி அன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை வழியாகக் கர்நாடக எல்லை வரை சென்றடையும் இந்த பசுமை வழிச்சாலையால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

விளைநிலங்களைக் கையகப்படுத்த முடிவுசெய்த தமிழக அரசு, அதற்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கியிருக்கும் நிலையிலும், விரிவான திட்ட அறிக்கையையோ, இத்திட்டத்திற்கான கருத்தறிக்கையையோ விவசாயிகளுக்கு வழங்க மறுப்பதன் மூலம் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

விளைநிலங்களைக் கையகப்படுத்தி சாலை அமைப்பதற்கான பணிகள் இனியும் தொடருமேயானால் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தையும் முன்னெடுக்கவும் தயங்க மாட்டோம் என அப்பகுதியின் ஒட்டுமொத்த விவசாயிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: பசுமை வழிச்சாலைDestroying farmland to build a greenway?: Uproar against the governmentஅரசுக்கு எதிராக கொந்தளிப்புகோவை முதல் சத்தியமங்கலம்
ShareTweetSendShare
Previous Post

சட்டக் கல்லூரி மாணவிகளுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் அலைக்கழிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

Next Post

ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் : விண்வெளியில் விவசாயம்!

Related News

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தானுக்கு அடுத்த’செக்’ : சிந்து நதியில் நீர்வளத் திட்டங்களை தீவிரப்படுத்தும் இந்தியா -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பதிவு மோசடி வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு!

தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் விவாதத்தைத் தடுத்து நிறுத்துவதே காங்கிரசின் நோக்கம் – கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் – பிரதமர் மோடி உறுதி!

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies