சேலம் மாவட்டம், கருப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் 25 லட்சம் ரூபாய் பணத்தைத் திருடிய கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான முகமது காசிம் என்பவர், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரிடம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக உதவியாளராகவும், ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார்.
கடந்த மே 12-ம் தேதி வீடு விற்பனை தொடர்பாக 25 லட்சம் ரூபாய் பணத்தை முகமது காசிம் பெற்றுள்ளார்.
இந்த பணத்தை காரில் வைப்பதாகக் கூறி சென்ற ஆனந்த் தலைமறைவானார். இதுகுறித்து விசாரித்து வந்த போலீசார், ஓமலூரில் பதுங்கியிருந்த ஆனந்தை கைது செய்து 15 லட்சம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் 10 லட்சம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.