போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் கிருஷ்ணா ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் உறுப்பினர் பிரசாத் அண்மையில் அடிதடி வழக்கில் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவிற்கு போதைப்பொருட்களை விற்றது தெரிய வந்தது. இதனால் ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தின் போது நடிகர் கிருஷ்ணா படபிடிப்புக்காக வெளியூர் சென்ற நிலையில் அவருக்கு சம்மன் அனுப்பட்டிருந்தது. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் கிருஷ்ணா ஆஜரானார். இதையடுத்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஜெயசந்திரன் மற்றும் சென்னை கிழக்கு இணை ஆணையர் விஜயகுமார் ஆகியோர் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினார்.
பிரதீப் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ள நடிகர் கிருஷ்ணா, தான் இல்லை என போலீசாரிடம் அவர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இரைப்பை பிரச்னை இருப்பதால் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பில்லை எனவும் போலீசாரிடம் கிருஷ்ணா வாக்குமூலம் அளித்துள்ளாராம்.
இதற்கிடையே மருத்துவ பரிசோதனையின் முடிவு மற்றும் ஆதாரத்தின் மூலம் நடிகர் கிருஷ்ணா மீது அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.