மயிலாடுதுறை அருகே சாலையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்த நபரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த நிலையில் அவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை தாலுகா நீடூர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த முகமது ஹாலிக் சமையல் வேலை செய்து வந்தார். இவர் நீடூரில் மரத்தடியில் அமர்ந்து நண்பர்கள் இருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்தனர்.
அவர்களில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவர் இறங்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகமது ஹாலிக்கை சரமாரியாக வெட்டிய பிறகு, இருவரும் அங்கிருந்து தப்பினர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது ஹாலிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் கொலையாளிகளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொலையாளிகளை கைது செய்யக் கோரி நீடூர் கடைவீதியில் ஜமாத்தார்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறி போலீசார் பேச்சுவார்த்தைக்கு நடத்திய நிலையில் போராடத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.