தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ஆசிர்வதித்து சங்கராச்சாரிய சுவாமிகள் வேல் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சங்கராச்சாரிய சுவாமிகள் அவர்கள் ஆசிர்வதித்து அனுப்பிய ‘வேல்’கிடைக்கப் பெற்றேன். இந்த வேல், தந்த ‘வெற்றி’ வேலாகவே மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட மக்களின் தன்னெழுச்சியை பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
முருக பக்தர்கள் மாநாடு வெற்றிக்கு தங்களின் ஆசிகளும் துணையாக நின்றதாக பரிபூரணமாக உணர்கிறேன். நமது பாரத தேசம் தர்மகர்ம பூமியாக திகழ்வதற்கும், நமது பாரதத்தின் புண்ணியங்கள் காக்கப்படுவதற்கும் விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் போன்ற ஞான குருக்களின் ஆசிர்வாதம் நமக்கு என்றைன்றைக்கும் தேவை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.