சென்னை அடையார் அருகே 2 கனரக லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அடையாறில் இருந்து புறப்பட்ட சிமெண்ட் கலவை லாரி ஒன்று ஒய்எம்சிஏ நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது இந்த லாரி மீது எதிரே வந்த கழிவுநீர் அகற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் கலவை லாரி சாலையில் தலை கீழாக கவிழ்ந்தது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள், காயமடைந்த லாரி ஓட்டுநர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விபத்தால் அடையாறு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.