மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்ட இரு குவாரிகளுக்கு 15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சுரங்கத் துறையும் வருவாய்த் துறையும் இணைந்து ட்ரோன் கணக்கெடுப்பு நடத்தியது. உரிமம் முடிந்த பிறகும் சுரங்க செயல்பாடுகள் தொடர்ந்து நடந்ததற்கும், அனுமதியளிக்கப்பட்ட அளவை மீறி வளங்களை எடுத்ததற்காகவும் 2 குவாரிகளுக்கு 15 கோடி ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அபராதத்தை 30 நாட்களுக்குள் செலுத்தவில்லை என்றால், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என வருவாய்த் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.