தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பாஜக மாவட்ட தலைவர் ஜெகதீசன், மாவட்ட துணைத் தலைவர் பெருமாள் உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பேட்டியளித்த ஹெச்.ராஜா, திருமாவளவன், அன்பில் மகேஷ், திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் மரியாதையுடன் பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், 2026 மே மாதத்திற்குப் பிறகு திமுக அரசு ஒழித்துக் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், கோயில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் மக்களின் பணத்தில் 40 சதவீதம் வரை திமுக அரசு கொள்ளையடிப்பதாக ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார்.