10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு தமிழக அரசு காரணம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு தமிழக அரசு காரணம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jun 26, 2025, 07:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு காட்டுநாயக்கன் சமூகத்தை வஞ்சிப்பது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி-சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் முத்துக்குமார் – திருமணி தம்பதியினரின் மகனான செல்வன். முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையளிக்கிறது.

பரமன்குறிச்சியில் CSI அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் முத்துக்கிருஷ்ணனுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு பள்ளி நிர்வாகம் அழுத்தம் கொடுத்ததாக அவரது குடும்பத்தார் கூறுகிறார்கள்.

மாணவரோ காட்டுநாயக்கன் பிரிவை சேர்ந்தவர் என்பதால் சாதிச்சான்றிதழை பெறுவதில் சிக்கல் இருந்துள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதல் இருந்தும், எத்தனையோ சட்டப் போராட்டங்களை நடத்தியும் காட்டுநாயக்கன் சமூகத்தினர் சாதிச்சான்றிதழைப் பெறுவது பெரும் போராட்டமாகவே மாறியுள்ளது.

இதனால், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளை இந்த சமூக மாணவர்கள் தாண்டுவதே இயலாத காரியமாக மாறி வருகிறது. அதனாலேயே உயர்கல்வி இந்த சமூக மக்களுக்கு எட்டாக்கனியாக இருப்பது வேதனையான விஷயம்.

சமூகநீதி அரசென்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும்  முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த காட்டுநாயக்கன் சமூகத்தை வஞ்சிப்பது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் முத்துக்கிருஷ்ணன் தன் சாவுக்கு காரணம் என்று பள்ளி தலைமையாசிரியர் உட்பட 4 பேரை எழுதி வைத்துள்ளதாக காவல்துறை கூறுகிறது.

இதன் விசாரணை எந்த அளவில் உள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். பள்ளி நிர்வாகம், பியூலா, மேரி, தலைமையாசிரியர் சத்யா மற்றும் வளர்மதி ஆகிய நான்கு ஆசிரியர்களை சஸ்பெண்ட் மட்டும் செய்துவிட்டால் போதுமென நினைப்பது அநீதி.

மாணவனின் தற்கொலைக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு துன்புறுத்தியதே காரணமென்றால் மாணவனின் மரணத்திற்கு பாதி பொறுப்பை இந்த அரசும் சுமக்க வேண்டுமென்பதை தார்மீக ரீதியாக யாரும் மறுக்க முடியாது.

அதே சமயம் அப்படிப்பட்ட அழுத்தத்தை கொடுத்தவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டுமென்பதை தமிழக மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். மறைந்த மாணவன் முத்துக்கிருஷ்ணனின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். மேலும் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு நயினார் நாகேந்திரன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Tags: DMKMK StalinNayanar Nagendran mlaTamil Nadu government responsible for 10th grade student's suicide: Nainar Nagendran's accusation
Share
Tweet
SendShare
Previous Post

42 இடங்களில் நாடு தழுவிய சோதனை – சிபிஐ!

Next Post

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies