இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற அலுவல் மொழி துறை நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்று கூறினார்.
பாரதத்தைப் பொறுத்தவரை மொழி என்பது வெறும் தொடர்புக்கு மட்டுமல்ல; தேசத்தின் ஆன்மா என்றும், மொழிகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதும், அவற்றை வளப்படுத்துவதும் முக்கியம் எனவும் தெரிவித்தார்.
மேலும், வரும் நாட்களில் அனைத்து இந்திய மொழிகளுக்கும், குறிப்பாக அலுவல் மொழிக்கும் இந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை; எந்த வெளிநாட்டு மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக் கூடாது
எனவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், நம் மொழியைப் போற்ற வேண்டும், பேச வேண்டும், நம் மொழியில் சிந்திக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அடிமைத்தனத்தின் மனநிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றும், ஒருவர் தனது மொழியில் பெருமை கொள்ளும் வரை, அடிமைத்தனத்தின் மனநிலையிலிருந்து விடுபட முடியாது எனவும் அமித்ஷா தெரிவித்தார்.