புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களில் 23 சதவீதம் பேர் ஒரு முறையாவது போதைப்பொருட்கள் பயன்படுத்தியுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளதாகத் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கூறியுள்ளார்.
பாரதி அறக்கட்டளை சார்பில் போதைப்பொருள் இல்லா புதுச்சேரி என்கிற விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முன்னிலையில் போதைப்பொருளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர், அரசுப் பள்ளி மாணவர்களில் 23சதவீதம் பேர் ஒருமுறையாவது போதைப் பொருட்கள் பயன்படுத்தியுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளதாகக் கூறினார்.