சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் தங்களின் பணிகளை வெற்றிகரமாக முடித்து வர வேண்டி உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
ஆக்சியம் 4 திட்டத்தின்கீழ் இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் தங்கள் பணிகளை வெற்றிகரமாக முடித்து வர வேண்டி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோயிலில் உள்ள லிங்கத்திற்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.