மொத்த பாகிஸ்தானும் க்ளோஸ் : 8000 கி.மீ பாயும் K-6 பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!
Jun 26, 2025, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மொத்த பாகிஸ்தானும் க்ளோஸ் : 8000 கி.மீ பாயும் K-6 பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிக்கு 9000 கிலோமீட்டர் வேகத்தில், 8000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா உருவாக்கி வருகிறது. பிரம்மோஸை விட அதிக சக்தி வாய்ந்த இந்த ஏவுகணையால் ஒரே நேரத்தில் முழு பாகிஸ்தானையும் ஒரே நேரத்தில் தாக்க முடியும் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 10 ஆண்டுகளாக சுய சார்பு இந்தியா, தனது வான் பாதுகாப்பு அமைப்பு, பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 5வது தலைமுறை ஸ்டெல்த் ரக அதிநவீன போர் விமானங்களை உள்நாட்டிலேயே உலகமே வியக்கும் வண்ணம் தயாரித்து வருகிறது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பெருகிவரும் சீனாவின் ஆதிக்கம், இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், கடற்படையை மேம்படுத்த பிரத்யேக அதிநவீன ஆயுதங்களைத் தயாரிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. புதிய விமானம் தாங்கிக் கப்பல்கள், ரகசிய போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற பெரிய திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக, 9,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரங்களில் உள்ள இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட JL-2 மற்றும் JL-3, ஏவுகணைகளைச் சுமக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியப் பெருங்கடலில் சீனா நிறுத்தியுள்ளது.

சீனாவை எதிர்கொள்ளும் வகையில் 2017ம் ஆண்டு, K-6 ஹைப்பர்சோனிக்  பாலிஸ்டிக் ஏவுகணையை    உருவாக்கும் பணியை DRDO தொடங்கியது. இந்தியாவின் ஏவுகணை நாயகனும் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பெயரிடப்பட்ட K-தொடர் ஏவுகணை குடும்பத்தின் அதிநவீன ஏவுகணை இந்த K-6 ஆகும்.

ஏற்கெனவே, 2,000 கிலோமீட்டர் வரம்பு கொண்ட K-3, 3,500 கிலோமீட்டர் வரம்பு கொண்ட K-4, மேலும் 6,000 கிலோமீட்டர் வரம்பு கொண்ட K-5 ஏவுகணைகள் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.

K-6 ஹைப்பர்சோனிக்  பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.  இந்த ஏவுகணை பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணையை விடவும் அதிக சக்தி வாய்ந்ததாகும். வழக்கமான வெடிமருந்துகள் மற்றும் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.

கடலுக்கு அடியில் மிக ஆழத்தில் இருக்கும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, இந்த K-6 ஹைப்பர்சோனிக்  பாலிஸ்டிக் ஏவுகணையைக்  குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஏவ முடியும்.  இது  சுமார் 7.5 மேக் வேகம் உடையதாகும். அதாவது மணிக்கு 9,260 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து தாக்கும் திறன் கொண்டதாகும்.

K-6 மூன்று-நிலை, திட-எரிபொருள் ஏவுகணையாகும். இந்த அதிநவீன ஏவுகணையின் சிறப்பு அம்சமே  Multiple Independently Targetable Re-entry Vehicle என்ற தொழில் நுட்பத்தைப்  பயன்படுத்துவதாகும். இது ஒரே நேரத்தில் பல போர்முனைகளைச் சுமந்து செல்ல உதவுகிறது.  மேலும் ஒவ்வொரு போர் முனையும் வெவ்வேறு இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் உடையதாகும்.

K-6 ஹைப்பர்சோனிக்  பாலிஸ்டிக் ஏவுகணை, S-5 வகை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. S-5 நீர்மூழ்கிக் கப்பல் சுமார் 12 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இது 3 டன் எடையுள்ள ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.

S-5 வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள், அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பல்களை விடவும்  இரண்டு மடங்கு பெரியது. இது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். 16 K-6 ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் வகையில் S-5 வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

2027 ஆம் ஆண்டுக்குள் தொடங்கும்  S-5 நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமானம் விரைவில் முடிக்கப்பட்டு, 2030க்குள் கடற்படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதே ஆண்டில், K-6 ஏவுகணையும் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

உலகளாவிய ஹைப்பர்சோனிக் அமைப்புகளுடன் ஒப்பிடும்போது ஏவுகணையின் வேக நன்மை  குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் அவன்கார்ட் Mach 27 வேகம் கொண்டது.  சீனாவின் DF-41  Mach 25 வேகம் கொண்டது. அவையெல்லாம், நிலத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஆகும். ஆனால்,  Mach 7.5 வேகமுடைய K-6 ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை உலகளவில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் வேகமான ஏவுகணைகளில் முதலிடத்தைப் பெறுகிறது.

வரும் ஜூலை ஒன்றாம் தேதி, (Kirov-III ) கிர்வாக்-III  ஸ்டெல்த் போர்க்கப்பலான (INS Tamala) ஐஎன்எஸ் தமால் என்ற சக்திவாய்ந்த போர்க்கப்பலை இந்தியா கடற்படையில் இணைக்க உள்ளது. மேலும் அரிஹந்த் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை அதிநவீன ஏவுகணை அமைப்புகளுடன் மேம்படுத்தும் பணியிலும் DRDO ஈடுபட்டுள்ளது.

வான் மற்றும் தரையில் தனது பாதுகாப்புத் திறனை மேம்படுத்தியுள்ள இந்தியா, கடலிலும் தனது வலிமையை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், K-6 ஹைப்பர்சோனிக்  பாலிஸ்டிக் ஏவுகணை இந்தியக் கடற்படைக்கு ஒரு வலிமையான சொத்து ஆகும்.

Tags: pakistanAll Pakistan is closed: India is manufacturing K-6 ballistic missile with a range of 8000 km8000 கி.மீ பாயும் K-6 பாலிஸ்டிக் ஏவுகணைஇந்தியப் பெருங்கடல்K-6 ஹைப்பர்சோனிக்  பாலிஸ்டிக் ஏவுகணைINIDIA
ShareTweetSendShare
Previous Post

ரேடாரால் பார்க்க முடியாது : சீனா கண்டுபிடித்த ‘கொசு’ ட்ரோன்!

Next Post

விண்வெளியில் வீரர்கள் சந்திக்கும் சவால்கள் : நொறுங்கும் எலும்புகள் – கதிர்வீச்சு!

Related News

விண்வெளியில் வீரர்கள் சந்திக்கும் சவால்கள் : நொறுங்கும் எலும்புகள் – கதிர்வீச்சு!

ரேடாரால் பார்க்க முடியாது : சீனா கண்டுபிடித்த ‘கொசு’ ட்ரோன்!

உலகளவில் ட்ரெண்டாகும் கூமாப்பட்டி!

வாடகை வழங்காமல் இழுத்தடிப்பு : புயலில் உதவிய மீனவர்கள் – கைவிட்ட தமிழக அரசு!

42 இடங்களில் நாடு தழுவிய சோதனை – சிபிஐ!

அகமதாபாத் விமான விபத்து : கருப்பு பெட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

மொத்த பாகிஸ்தானும் க்ளோஸ் : 8000 கி.மீ பாயும் K-6 பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு : எல். முருகன் குற்றச்சாட்டு!

மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பாஜக முன்னின்று குரல் கொடுக்கும் : நயினார் நாகேந்திரன்

மாம்பழ விவசாயிகளை காக்கத் தவறிவிட்டதாக தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஆசிரியரை கொல்ல முயன்ற மர்ம நபர்கள்!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு தமிழக அரசு காரணம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஹிமாச்சல பிரதேசம் : கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies