சர்வேதச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி புதுச்சேரியில் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அதன்படி கடற்கரை சாலையில் தொடங்கிய பேரணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் போலீசார், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, போதைப்பொருளுக்கு எதிராக கையில் பதாகைகளை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.