நாட்டின் நலனைவிட ஒரு குடும்பத்தின் நலனே முதன்மையாகக் கருதப்பட்டதால் அவசரநிலை ஏற்பட்டது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காங்கிரஸை சாடியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் நலனே இன்று முதன்மையாகக் கருதப்படுவதாகத் தெரிவித்தார்.
சசி தரூர், சுப்ரியா சுலே, கனிமொழி உள்ளிட்டோர் தலைமையிலான நாடாளுமன்ற குழுக்களைப் பார்க்கும்போது தனக்கு மிகுந்த பெருமையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், பயங்கரவாதம் தொடர்ந்தால் நம்மை நாமே தற்காத்துக் கொள்ளும் உரிமை நமக்கு உண்டு எனவும் ஜெய்சங்கர் உறுதிபட தெரிவித்தார்.