வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் சோலையார் அணை முழு கொள்ளளவான 160 அடியை எட்டிய நிலையில், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதனால் நீர்வரத்து அதிகரித்து சோலையார் அணை முழு கொள்ளளவான 160 அடியை எட்டிய நிலையில், சேடல் டேம் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையின் பாதுகாப்பு கருதி, எந்த நேரத்திலும் அணையின் மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்படலாம் என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.