தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம், மர்ம நபரால் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் தனது விலை உயர்ந்த இருசக்க வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார்.
மறுநாள் இருசக்கர வாகனம் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் அருகே பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது மர்ம நபர், அதிகாலையில் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.