நடப்பாண்டுக்கான குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு ஜூலை ஒன்றாம் தேதி நடைபெறும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட், மாநாட்டில் பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.