கேரள மாநிலம் இடுக்கியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஜீப்பை அப்பகுதி மக்கள் கயிறுக் கட்டி மீட்டனர்.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இடுக்கியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அவ்வழியாகச் சென்ற ஜீப் சிக்கிக் கொண்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஜீப்பில் பயணித்தவர்களை கயிறுக் கட்டி மீட்டனர்.