திருவண்ணாமலை மாவட்டம் கரிக்கலாம்பாடியில் கிணற்றில் தாய் மற்றும் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கரிக்கலாம்பாடியைச் சேர்ந்தவர்கள் விவசாயி விக்னேஷ் – உமாதேவி தம்பதிக்கு 1 வயதில் பெண் குழந்தையொன்று இருந்தது.
இந்நிலையில் இவர்களது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் உமாதேவியும், அவரது ஒரு வயது குழந்தையும் சடலமாகக் கிடந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர், சடலங்களைக் கைப்பற்றினர்.
இதுகுறித்து வழக்குப்பதிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார், இருவரும் கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.