ஜூலை 7 முதல் பொறியியல் கலந்தாய்வு!
Aug 6, 2026, 12:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜூலை 7 முதல் பொறியியல் கலந்தாய்வு!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 04:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆகஸ்டு 26ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொறியியல் கலந்தாய்வுக்கு மொத்தம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகக் கூறினார்.

அதில், 2 லட்சத்து 50 ஆயிரத்து 298 பேர் பதிவுக்கட்டணம் செலுத்தி உள்ளதாகவும், 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 மாணவர்களுக்குத் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 47 ஆயிரத்து 372 மாணவர்களுக்குத் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சகஸ்ரா என்ற மாணவி முதலிடத்தை பிடித்தாகவும், நாமக்கலைச் சேர்ந்த கார்த்திகா 2வது இடமும், அரியலூரைச் சேர்ந்த அமலன் ஆண்டோ என்ற மாணவர் 3ஆம் இடம் பிடித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் கடலூரைச் சேர்ந்த தரணி என்ற மாணவி முதலிடம் பிடித்தாகவும், சென்னையைச் சேர்ந்த மைதிலிக்கு 2வது இடமும், கடலூரைச் சேர்ந்த முரளிதரன் என்ற மாணவருக்கு 3வது இடமும் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதிவரை நடைபெறும் என்றும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7, 8ஆம் தேதிகளில் நடைபெறும் எனவும் கூறினார்.

பொது பிரிவினருக்கான சிறப்பு இடஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 9 முதல் 11ஆம் தேதிவரை நடைபெறும் என்றும், பொது கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதிவரை நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.

துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23ஆம் தேதி வரையும், கலந்தாய்வு முழுவதும் இணையதளம் வாயிலாக நடைபெறும் எனவும் அவர் கூறினார். மேலும், கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட கட்டண முறை, நடப்பாண்டும் தொடரும் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.

Tags: Engineering counseling from July 7thபொறியியல் கலந்தாய்வு
Share
Tweet
SendShare
Previous Post

திருவண்ணாமலை : கிணற்றில் மிதந்த தாய், குழந்தையின் சடலம் மீட்பு!

Next Post

இஸ்ரேல் பிரதமர் குறித்த ஜோஹ்ரான் மம்தானி வீடியோ வைரல்!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies