கொடைக்கானல் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானல் வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், குணா குகை, பைன் மரக் காடுகள், மேயர்ச் சதுக்கம், பில்லர் ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
இதன் காரணமாக, கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
சுற்றுலா தளங்களில் சுற்றித் திரியும் யானைகள் அடர்ந்த வனப் ப்பகுதிக்குள் சென்ற பின் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், யானையின் நடமாட்டத்தைத் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் வனத் துறையினர்த் தெரிவித்துள்ளனர்.