மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சட்ட கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா அருகே கஸ்பா பகுதியில் உள்ள சட்ட கல்லூரியில் தேர்வு தொடர்பான படிவங்களைச் சமர்ப்பிக்க வந்த மாணவியை 2 மாணவர்கள் உட்பட 3 பேர்க் கூட்டு பாலியல் வன்கொடுமைச் செய்துள்ளனர்.
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், மாணவர்கள் ஜயிப் அகமது, பிரமித் முகர்ஜி மற்றும் முன்னாள் மாணவர் மோனோஜித் மிஸ்ரா ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.
கடந்தாண்டு, ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டு படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது சட்ட கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.