குஜராத் மாநிலம் அகமதாபாத் ரதயாத்திரையில் கோயில் யானைகள் தறிகெட்டு ஓடியதால் பக்தர்கள் பீதியடைந்தனர்.
புரி ஜெகந்நாதரின் ரதயாத்திரை ஒடிசா மட்டுமின்றி , மேற்கு வங்கம், குஜராத் போன்ற மாநிலங்களிலும் கோலாகலமாகத் தொடங்கியது.
அதன்படி குஜராத்தின் அகமதாபாத் காதியா பகுதியில் ரத யாத்திரையின்போது அலங்கரிக்கப்பட்ட கோயில் யானைகளில் ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் அதீதச் சப்தம் எழுப்பியதால் மிரண்ட யானைகள் பொதுமக்களின் கூட்டத்தை நோக்கி ஓடின. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.