ராமநாதபுரத்தில் மதுபான பார் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில் சிறார் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
சூரங்கோட்டையைச் சேர்ந்த நிர்மல் என்பவர், ராமநாதபுரத்தின் கிருஷ்ணா நகரில் மதுபான பார் நடத்தி வருகிறார். இவர் கடந்த புதன்கிழமை நயினார் கோவில் விளக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.
இதனையடுத்து படுகாயமடைந்த நிர்மல் மீட்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.மடை பகுதியைச் சேர்ந்த பாரத், அபினேஷ் மற்றும் 17 வயது சிறார் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.