தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக அரியலூர்ப் பாஜக மாவட்ட தலைவர்ப் பரமேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்.
அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர்க் கண்ணன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர், ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
அதில், தங்களது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தனர். இதனிடையே வழக்கை விசாரித்த ஜெயங்கொண்டம் போலீசார், பாஜக மாவட்ட தலைவர்ப் பரமேஸ்வரி மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பொய் புகார்ப் புனையப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் புகாரை போலீஸ் தரப்பில் தள்ளுபடி செய்தனர்.