ஓசூர்ப் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்ப் பேருந்து நிலையம் எதிரே உள்ள பெங்களூரு – சென்னைத் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கடந்த வாரம் சாலை இணைப்பில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் கனரக வாகனங்கள் சீதாராம்மேடு உள்வட்ட சாலையில் திருப்பி விடப்படுவதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரக் காலமாக வாகன நெரிசல் ஏற்பட்டுப் பல கிலோ மீட்டர்த் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன.