முகமது சிராஜ் விக்கெட் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை ரன்களை வழங்க கூடாது என இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முகமது சிராஜ் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியதுடன் ஓவருக்குச் சராசரியாக 4 ரன்கள் வீதம் விட்டுக்கொடுத்தார்.
2-வது இன்னிங்சிலும் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள அஸ்வின், சிராஜ் தனது ஓவருக்கு 4 முதல் 5 ரன்களைக் கொடுப்பதால் பும்ராவை மீண்டும் பவுலிங் செய்ய வைக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.