கடலூர் மாவட்டம், T.மடப்புரத்தில் காதலித்த மகளைத் தந்தையே கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
T.மடப்புரத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான அர்ஜுனன் என்பவர், தனது மகளான அபிதாவுக்குத் திருமணத்துக்காக வரன் பார்த்து வந்துள்ளார்.
இதனிடையே தனது நண்பரைக் காதலித்த அபிதா, தொடர்ந்து திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதுதொடர்பாகத் தந்தை அர்ஜுனன் மற்றும் மகள் அபிதா இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த அர்ஜூனன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபிதாவைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர்ப் புத்தூர் காவல் நிலையத்தில் அர்ஜுனன் சரணடைந்தார்.